Advertisment

சென்னையில் ரூ. 100 கோடி செலவில் அழகு பெறும் 3 கடற்கரைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Budget 2024 singara chennai 2 announcements by  Thangam Thennarasu Tamil News

'சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்' - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Nadu Budget | Thangam Thennarasu: 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து அவர் உரையாற்றி வருகிறார். மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

Advertisment

சிங்காரச் சென்னை-2

இந்நிலையில், சிங்காரச் சென்னை-2 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், "சிங்காரச் சென்னை-2 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 

சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும். 

இதேபோல், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Thangam Thennarasu Tamil Nadu Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment