/tamil-ie/media/media_files/uploads/2018/04/edappadi-meet-governor.jpg)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார். கவர்நர் மாளிகையில் இன்று மாலை நிகழும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள முதல்வர், ஆளுநரை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில் காவிரி விவகாரம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் தமிழகத்தில் இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் “ஸ்கீம்” என்ற வார்த்தையின் விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தது. மேலும், வரும் மே 3ம் தேதிக்குள் காவிரி வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாமதமாகி வரும் நிலையில், மத்திய அரசு தற்போது கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. இதனால் தமிழகத்தில் போராட்டங்களும் எதிர்ப்புகளும் உச்சத்தை அடைந்துள்ளது.
தற்போது நிலவி வரும் இந்தச் சூழலில், இன்று மாலை ஆளுநர் மாளிஐயில், தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில், காவிரி விவகாரம் குறித்து பேசப்படும் என்ற தகவல் வெளியாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.