தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருச்சி வருகை தரும் நிலையில், 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வர உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி வரும் 08.05.2025 முதல் 09.05.2025 அன்று நள்ளிரவு 12 மணிவரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே, 08.05.2025 முதல் 09.05.2025 வரை தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.