தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை கல்லூரிகள்: ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TN CM MK Stalin announces 4 more new govt arts and science colleges Tamil News

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வியாண்டில் 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகிறது.

Advertisment

அதன்படி, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய கலை கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 4 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் 1,120 பேர் உயர்கல்வி பெறுவார்கள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்கல்வித்துறை சார்பில் இக்கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் புதிய கல்லூரிகளை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள்.

ஏற்கனவே, உயர்கல்வித்துறை சார்பில் 2025-26ம் கல்வியாண்டு முதல் செயல்படும் கடலூர் மாவட்டம் பண்ருட்டு, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மட்டும் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Govt Tn Government Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: