'இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி': ஸ்டாலின் பேட்டி

"மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இருமொழி கொள்கை தான் கொண்டு வர வேண்டும். என்னுடைய கவலை எல்லாம் நாட்டை பற்றி தான், மாநிலத்தை பற்றி தான்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TN CM MK Stalin Birthday Message Tamil News

'இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Advertisment

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, ம.நீ.ம தலைவர் கமல், நடிகர் ரஜினி, த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், 'இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் அளித்த பேட்டி அளித்தார். அப்போது, “மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும். இந்தி திணிப்பு கூடாது என்பதே எனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி. இருமொழி கொள்கை தான் கொண்டு வர வேண்டும். என்னுடைய கவலை எல்லாம் நாட்டை பற்றி தான், மாநிலத்தை பற்றி தான்." என்று அவர் தெரிவித்தார்.  

Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: