/tamil-ie/media/media_files/uploads/2022/02/mkstalin.jpg)
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர், சென்னை 122 வார்டில் தேனாம்பேட்டை SIET கல்லூரி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/mk-1.jpg)
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், "வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். ராணுவம் வரக்கூடிய அளவிற்கு எந்த சம்பவமும் கோவையில் நடைபெறவில்லை. தோல்வி பயம் காரணமாகவே கோவையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/line.jpg)
ஆதாரத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கணிப்பின்படி 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.