/indian-express-tamil/media/media_files/2025/06/02/Ek1gyWkfFku3XCjD1orl.jpg)
தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவர் கே.கே.எம் தங்கராசா. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக திருச்சியில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவர் கே.கே.எம் தங்கராசா. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக திருச்சியில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தி.மு.க-வினரால் கருணாநிதியின் முரட்டு பக்தர் என அழைக்கப்பட்டவரும், தி.மு.க-வின் கொடிகாத்த குமரன் எனவும் அழைக்கப்பட்டவர் தான் கே.கே.எம் தங்கராஜா. தி.மு.க-வில் இருந்து ம.தி.மு.க பிரிந்து சென்றபோது, ம.தி.மு.க தலைவர் வைகோ திருச்சி மிளகு பாறையில் ம.தி.மு.க கொடி ஏற்ற வந்தார்.
அப்போது, வைகோவை அப்பகுதிக்குள் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வெளியேற்றி அப்பகுதியில் தி.மு.க கொடி தவிற வேற எந்த கொடியும் இருக்கக்கூடாது என முழக்கமிட்டதோடு, தடுத்து நிறுத்தினார். இவர் திருச்சி மாநகர தி.மு.க செயலாளர், ஆவின் சேர்மன் என அக்கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
இந்நிலையில், கே.கே.எம் தங்கராசாவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கே.எம் ராஜா மறைவு குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் எனவும் கூறியுள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.