3% அதிகரிப்பு... அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்குமான டி.ஏ -வை 53% ஆக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்குமான டி.ஏ -வை 53% ஆக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TN CM MK Stalin important announcement tomorrow January 23 Tamil News

அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024-க்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரிக்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் அமைப்பு கோரிக்கை விடுத்தது.  

Advertisment

மேலும், தமிழக அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்குமான டி.ஏ -வை 53% ஆக உயர்த்த வேண்டும் என்றும் ஒன்றியம் அமைப்பு மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. 

ஸ்டாலின் அறிவிப்பு 

இந்த நிலையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சர் இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Govt Cm Mk Stalin Tamilnadu Govt

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: