தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ட்வீட்டில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை 'ஸ்கிசோஃப்ரினிக்' என்று கூறியது ட்விட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"உறவினரின் வளைகாப்பு விழாவில்" கலந்து கொண்டதால், லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்று அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிடிஆர், அது உறவினர் வீட்டு விழா இல்லை, சமுதாய வளைகாப்பு விழா என தெளிவுபடுத்தினார். மேலும் தனக்கு கொழுந்தியாள் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், ட்விட்டரில் செய்தியாளர் சந்திப்பின் வீடியோவுக்குப் பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர், “100% தமிழ்,” அல்லது “ஐபிஎஸ் - பதிப்பு அச்சுறுத்தல் வழங்குபவர்” என்பதைத் தவிர, “நான் இறக்கும் வரை ஸ்கிசோஃப்ரினிக்‘ கன்னடிகா ’என்றும் போலிச்செய்திகளின் தலைவர் என்றும் அண்ணாமலையை குறிப்பிட்டு ட்வீட் செய்தார். அதாவது, அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது, அவர் ஒரு கன்னடராக இருப்பதாகவும், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஒரு தமிழர் என்றும் அண்ணாமலை கூறிய கருத்துக்களைக் குறிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிடிஆர் பயன்படுத்திய ஸ்கிசோஃப்ரினிக் என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி உள்ளது. ஸ்கிசோஃப்ரினியா என்பது எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டு செயல்படும் மனக்கோளாறு ஆகும். நிதியமைச்சர் பிடிஆர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மனநிலை சரியில்லாதவர் என்பதுபோல் குறிப்பிட்டதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த சர்ச்சை கருத்து; பிடிஆர்-க்கு ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு
TN Finance minister PTR controversy comments on BJP leader Annamalai: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து சர்ச்சை ட்வீட்; நிதியமைச்சர் பிடிஆர்-க்கு ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு
TN Finance minister PTR controversy comments on BJP leader Annamalai: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து சர்ச்சை ட்வீட்; நிதியமைச்சர் பிடிஆர்-க்கு ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ட்வீட்டில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை 'ஸ்கிசோஃப்ரினிக்' என்று கூறியது ட்விட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"உறவினரின் வளைகாப்பு விழாவில்" கலந்து கொண்டதால், லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்று அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிடிஆர், அது உறவினர் வீட்டு விழா இல்லை, சமுதாய வளைகாப்பு விழா என தெளிவுபடுத்தினார். மேலும் தனக்கு கொழுந்தியாள் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், ட்விட்டரில் செய்தியாளர் சந்திப்பின் வீடியோவுக்குப் பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர், “100% தமிழ்,” அல்லது “ஐபிஎஸ் - பதிப்பு அச்சுறுத்தல் வழங்குபவர்” என்பதைத் தவிர, “நான் இறக்கும் வரை ஸ்கிசோஃப்ரினிக்‘ கன்னடிகா ’என்றும் போலிச்செய்திகளின் தலைவர் என்றும் அண்ணாமலையை குறிப்பிட்டு ட்வீட் செய்தார். அதாவது, அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது, அவர் ஒரு கன்னடராக இருப்பதாகவும், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஒரு தமிழர் என்றும் அண்ணாமலை கூறிய கருத்துக்களைக் குறிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிடிஆர் பயன்படுத்திய ஸ்கிசோஃப்ரினிக் என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி உள்ளது. ஸ்கிசோஃப்ரினியா என்பது எண்ணம், செயல் ஆகியவை மாறுபட்டு செயல்படும் மனக்கோளாறு ஆகும். நிதியமைச்சர் பிடிஆர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மனநிலை சரியில்லாதவர் என்பதுபோல் குறிப்பிட்டதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.