அரசு மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர்களுக்கு நிகராக ஒப்பந்த செவிலியர்கள் பணி செய்கிறார்களா என மதிப்பீடு செய்ய அவர்களின் மனுவை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி. ஆஷா அமர்வு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 10,000 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர பணியில் உள்ள செவிலியர்களுக்கு இணையான பணியைச் செய்கிறார்களா? அவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டுமா என்பதை மதிப்பீடு செய்ய தனிப்பட்ட பிரதிநிதித்துவத்திற்கு அழைப்பு விடுத்து மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனரகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியதற்காக அப்போதைய சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷுக்கு எதிராக 2019-ம் ஆண்டில் மருத்துவ ஆட்சேர்ப்பு வாரிய செவிலியர்கள் அதிகாரமளித்தல் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்த சென்னை
சென்னை உயர் நீதிமன்றம்
ஜனவரி 4, 2023-க்குள் இந்த நடைமுறையை முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, ஒப்பந்த செவிலியர்களிடமிருந்து தனிப்பட்ட எழுத்துப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்கு அழைப்பு விடுக்க தற்போதைய சுகாதாரத்துறை செயலர் பி. செந்தில்குமார் மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனரகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், டிசம்பர் 11-ம் தேதிக்குள் ஒரு அறிக்கையை கமிட்டிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரச் செயலாளரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனர் வி.பி. ஹரி
இருப்பினும், ஒப்பந்த செவிலியர்களுக்கோ அல்லது அவர்களது சங்கங்களுக்கோ தனிப்பட்ட விசாரணைக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்றும், ஆவணங்கள் மற்றும் ஒப்பீட்டு விவரங்களின் அடிப்படையில் தனிப்பட்ட எழுத்துப்பூர்வ பிரதிநிதித்துவங்களை பரிசீலித்தால் போதுமானது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெளிவுபடுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“