Advertisment

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை; அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊழியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
cps

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊழியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சி.பி.எஸ்) ரத்து செய்ய வேண்டும் எறும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் அலுவலக நிர்வாகிகள் தொடங்கினர்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி. ஃபிரெடெரிக் எங்கெல்ஸ், மாநில அரசு ஏப்ரல் 1, 2003 முதல் சி.பி.எஸ்-ஐ செயல்படுத்தி வருகிறது. 6.28 லட்சம் ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின்படி, ஊழியர்களின் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% அரசு பிடித்தம் செய்வதோடு அதற்கு இணையான தொகையை அரசு வழங்குகிறது என்று தெரிவித்தார்.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என, வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டுகள் ஆகியும், அதை நிறைவேற்றவில்லை என்று பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி. ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment