/tamil-ie/media/media_files/uploads/2022/08/Aavin-Water.jpg)
ஆவின் குடிநீர் பாட்டில்கள் விரைவில் அறிமுகம்
ஆவின் குடிநீர் பாட்டில்கள் விரைவில் விநியோகிக்கப்பட உள்ளன. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் மூலம் பால், நெய், வெண்ணெய் என பல்வேறு பொருள்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் குடிநீர் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான 28 தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.
இந்த ஆவின் தண்ணீர் பாட்டில்கள் சந்தை விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கப்பட உள்ளன. எனினும் விலை பட்டியல் தற்போது வரை தயாராகவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த ஆவின் பாட்டில்கள் அரை லிட்டர், ஒரு லிட்டர் என பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்பட உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிக்கவுள்ளார். இந்தத் தகவலை பால்வளத்துறை அமைச்சர்ந நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.