/indian-express-tamil/media/media_files/2025/04/25/PF1348a1xsLuduNwxlOe.jpg)
கரூரில் நேற்று (2025-09-27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் வரை உயிரிழந்தது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 குழந்தைகளும் அடங்குவர். இப்படி இருக்கும்போது இந்த துயர சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல கட்சியினர் இரங்கலையும் வருத்தத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். திரையுலகில் பலரும் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த துயரச் சம்பவம் குறித்து ஆளுநர் ரவி முதலமைச்சரிடம் விளக்கம் கோரியுள்ளார். குறிப்பாக, இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் உயிரிழப்புகளுக்கான காரணம் என்ன என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நடிகர் விஜய் பங்கேற்ற இந்தக் கூட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் எத்தனை காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர் என்பது போன்ற பல முக்கிய கேள்விகளையும் ஆளுநர் எழுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கக் கோரி ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.