Advertisment

தமிழகம் முழுவதும் 2 நாள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2ம் ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
TN GOVT Announce Tasmac holiday for 2 days

மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2 நாள் டாஸ்மாக் கடைகள் அடைகப்பட உள்ளது.

Tasmac | Tamilnadu-government: தமிழ்நாட்டில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2ம் ஆகிய இரு தினங்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 28ம் தேதி இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதேபோல் காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இந்த இரண்டு நாட்களும் அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இந்நாட்களில் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tasmac Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment