/indian-express-tamil/media/media_files/2025/11/03/secretariate-3-2025-11-03-14-23-19.jpg)
கரூர் துயரச் சம்பவத்துக்குப் பின், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க நவம்பர் 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரையின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏறடுத்தியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
கரூர் துயரச் சம்பவத்துக்குப் பின், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பரப்புரை, ரோடு ஷோ, பொதுக் கூட்டங்களை நடத்த நெறிமுறைகள் வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 6-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நம்பவர் 6-ம் தேதி காலை 10.30ம் மணிக்கு மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்டப்பேரவையில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us