'இனி அரசு ஊழியர்கள் இனிஷியல், கையொப்பத்தை தமிழில் தான் எழுத வேண்டும்' - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
For TN GOVT employees, Writing initials and signature in Tamil mandatory says GO Tamil News: முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
For TN GOVT employees, Writing initials and signature in Tamil mandatory says GO Tamil News: முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
Tamilnadu news in tamil: தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலின் போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பம் எழுத ஊக்குவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை (ஜிஓ) வெளியிட்டுள்ளது.
Advertisment
இந்த புதிய அரசாணை 1978 மற்றும் 1998ல் இது தொடர்பாக வெளியிடப்பட்ட முந்தைய அரசாணைகளையும், 1997ல் வெளியிடப்பட்ட அரசாங்கக் கடிதத்தையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது. தவிர, பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது, வருகைக்கு மதிப்பெண் வழங்குதல், பள்ளி, கல்லூரிகளில் மாற்றுச் சான்றிதழ் பெறுதல் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் மாணவர்கள் தங்கள் இனிஷியல் எழுதவும், கையொப்பமிடவும் தமிழில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
மேலும், இந்த அரசாணையில் அரசுத் துறைகளின் அனைத்து உத்தரவுகளிலும், பெயர்கள் மற்றும் முதலெழுத்துக்கள் குறிப்பிடப்படும் போதெல்லாம், அவை தமிழில் இருக்க வேண்டும் என்றும், பொது மக்களும் அரசு விண்ணப்பப் படிவங்களில் தமிழில் கையொப்பம் மற்றும் முதலெழுத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்களுக்கு சுவரொட்டிகள் ஒட்டுவதன் மூலம் அரசுத் துறைகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த புதிய அரசாணை வலியுறுத்தியுள்ளது. முந்தைய இரண்டிலிருந்து புதிய புதிய அரசாணை வெளியிடப்பட்டது என்றும், இந்த விஷயத்தில் அரசாங்க கடிதம் திறம்பட பின்பற்றப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதை மீறுபவர்களுக்கு எந்த தண்டனையும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“