/indian-express-tamil/media/media_files/apP4Z8ndJZN0YB1HdbXC.jpg)
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
Magalir Urimai Thogai | Tamil Nadu Government: 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1.13 கோடி பேர் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாகவும், மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.