Advertisment

10 நாளில் எஸ்.எம்.எஸ்: மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு குட் நியூஸ்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
TN govt new update on Kalaingar Magalir Urimai Thogai scheme Tamil News

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

Magalir Urimai Thogai | Tamil Nadu Government: 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1.13 கோடி பேர் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 

தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாகவும், மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Government Magalir Urimai Thogai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment