முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.க்கள் நிறைவேற்றும் திட்டங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு ஏப்ரல் 26 அறிவித்தது.
இந்த வரி வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக உள்ளது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஒரு தொகுதிக்கு ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் இருந்தே 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியும் கட்டப்படுகிறது.
இதனால், தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் விடுத்த கோரிக்கை விடுத்தனர். மேலும் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு தமிழகம் அதிக நிதி ஒதுக்குகிறது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பல எம்.எல்.ஏ.க்கள் சி.டி.எஸ் இன் கீழ் பணிகளுக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி அமலாக்கத்தை பாதிக்கிறது என்று குறிப்பிட்டனர்,
இதற்கு பதிலளிக்கும் விதமாக தொகுதி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை, தமிழக அரசே ஏற்கும் என ஸ்டாலின் கூறினார்.