/tamil-ie/media/media_files/uploads/2023/06/Beela-Rajesh-and-Secretariate.jpg)
6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் பீலா ராஜேஷ் உள்பட 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பீலா ராஜேஷ் உள்பட 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எரிசக்தித்துறை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநராக இருந்த விஜய ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குநராக இருந்த ஆசியா மரியம் சிறுபாண்மையினர் நலத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி இணை செயலாளராக இருந்த சந்திர சேகர் சஹாமுரி பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநராக நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.