Advertisment

கட்டடங்களின் உயரத்தை அதிகரித்து விதிகளில் திருத்தம்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு

தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019-ல் திருத்தம் செய்து, கட்டடங்களின் உயரத்தை அதிகரித்து அறிவித்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
buildings

தமிழ்நாட்டில் கட்டப்படும் கட்டடங்களின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச உயரம் அதிகரிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019-ல் திருத்தம் செய்து, கட்டடங்களின் உயரத்தை அதிகரித்து அறிவித்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019-ல் திருத்தம் செய்து, தரைக்கு மேல் + மூன்று தளங்களுக்கு அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட உயரத்தை 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராகவும், தரைக்கு மேல் + இரண்டு தளங்களுக்கு  9 மீட்டரிலிருந்து 10 மீட்டராக உயர்த்தப்பட்டிருக்கிறது.  இதன் மூலம், வீடு வாங்குபவர்கள் விசாலமான அறைகளை அனுபவிக்க முடியும்.

தமிழ்நாட்டில் கட்டப்படும் கட்டடங்களின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச உயரமாக, தரைக்கு மேல் + மூன்று தளங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உயரத்தை 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராகவும், தரைக்கு மேல் + இரண்டு தளங்களுக்கு  9 மீட்டரிலிருந்து 10 மீட்டராக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் நாடு அரசு, கட்டடங்களின் உயரத்தை உயர்த்தும் நடவடிக்கையால், கார் பார்க்கிங்கிற்கு அதிக அனுமதி கிடைக்கும் என  பில்டர்ஸ்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு தளத்திலும் தரையிலிருந்து உச்சவரம்பு உயரம் 10 அடியில் இருந்து 11.5 அடியாக அதிகரிக்கும். இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று பில்டர்ஸ்கள் கூறுகிறார்கள்.

இது மட்டுமில்லாமல், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்ட விதிகள் 2019-ல் (டி.என்.சி.டி.பி.ஆர்) திருத்தம் செய்து, 8 குடியிருப்புகள் கொண்ட கட்டடங்களுக்கு நிறைவுச் சான்றிதழ் தேவையில்லை என்ற ஷரத்து ஒன்றையும் இந்த துறை அறிமுகப்படுத்தியுள்ளது. கட்டடம் கட்டுபவர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றாலும், அதை செயல்படுத்துவதில் அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

தற்போது, மூன்று குடியிருப்பு அலகுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாமல் உள்ள கட்டடங்களுக்கு நிறைவுச் சான்றிதழ்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் அளவு மாறாமல் இருந்தாலும், குடியிருப்பு அலகுகள் மூன்றில் இருந்து எட்டாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டடத்திற்கு தண்ணீர் இணைப்பு மற்றும் மின் இணைப்புகள் பெற நிறைவு சான்றிதழ் கட்டாயம். இந்த விலக்கு மூலம், அவற்றைப் பெறுவது எளிதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment