Advertisment

பொன்னி, ரம்யா பாரதி... 2 முக்கிய டி.ஐ.ஜி-கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

உள்துறை அமைச்சகம் அவர்களை அழைக்கும் பட்சத்தில் அதற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
Ponni Ramya.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக காவல் துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி-கள் மத்திய அரசு பணிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisment

காஞ்சிபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜியாக இருக்கும் பொன்னி மத்திய தொழிற்பாதுகாப்பு படைக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுவாக இந்திய ஆட்சி பணிக்கு ஒருவர் தேர்வான பின் அவருக்கு இரண்டு இடங்களில் பொறுப்புகள் வழங்கப்படலாம். ஒன்று மத்திய அரசின் பொறுப்பு  அல்லது மாநில அரசின் கீழ் பொறுப்பு வழங்கப்படும். இப்படி மாநில அரசு பணிக்கு தேர்வாகும் ஒருவரை மத்திய அரசு பணிக்கு அழைக்க முடியும். அந்த வகையில் உள்துறை அமைச்சகம் இவரை அழைக்கும் பட்சத்தில் அதற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment