/indian-express-tamil/media/media_files/2025/10/22/tn-minister-anbil-mahesh-inspects-and-provides-relief-house-damage-due-to-incessant-rains-tamil-news-2025-10-22-19-13-20.jpg)
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழையால் சேதாரமான வீட்டினை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழையால் சேதாரமான வீட்டினை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் வசிக்கும் ஜாக்குலின் மேரி என்பவரது வீடு மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பலத்த சேதமானது.
இதுகுறித்து கேள்விப்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது தொகுதிக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி பகுதியில் வசித்து வரும் ஜாக்குலின் மேரியின் இல்லம் சென்று சேதமடைந்த இல்லத்தை பார்வையிட்டு, ஆறுதல் தெரிவித்ததோடு, வீட்டை புதுப்பிக்க போதிய நிவாரணத் தொகை வழங்கி, அரசு அதிகாரிகளிடம் அடுத்த கட்ட நிவாரண பணிகளை உடனே செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாநகர செயலாளர் மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ், மாமன்ற உறுப்பினர் சீத்தாலட்சுமி, வட்டக் கழக செயலாளர் முருகானந்தம், தமிழ்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.