'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: திருச்சியில் தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி மாநகராட்சி 36, 37ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி 36, 37ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
New Update
TN Minister Anbil Mahesh Poyyamozhi  Ungaludan Stalin Camp Trichy  Tamil News

அமைச்சர் அன்பில் மகேஸ் முகாமில் வருவாய் துறை சார்பாக அரியமங்கலம் லட்சுமிபுரத்தை சேர்ந்த பிரதாபன் பூரன் என்பவருக்கு பட்டாவை வழங்கினார்.

திருச்சி மாநகராட்சி 36, 37ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரியமங்கலத்தில் உள்ள மண்டலம் மூணு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் முன்னிலை வகித்தார். இந்த முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 

Advertisment

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் முகாமில் வருவாய் துறை சார்பாக அரியமங்கலம் லட்சுமிபுரத்தை சேர்ந்த பிரதாபன் பூரன் என்பவருக்கு பட்டாவை வழங்கினார். இதே போல் மாநகராட்சி சார்பாக காலி மனை வரி விதிக்கப்பட்ட சகஷ்கர லட்சுமி என்பவருக்கு அதற்கான வரி ரசீதை வழங்கினார். மேலும், இந்த முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43 சேவைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு இடம் பொதுமக்கள் வழங்கும் மனுக்களை பெற்று அதற்கு உடனடி தீர்வு எட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்

இந்த முகாமில் மாமன்ற உறுப்பினர்கள் கார்த்தி, நீலமேகம், வருவாய் கோட்ட அலுவலர் அருள், தாசில்தார் சக்திவேல், முருகன், உதவி ஆணையர் சரவணன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன் இளைநிலை பொறியாளர் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல். 

Trichy Anbil Mahesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: