டாஸ்மாக் ஊழல்: 'அரசியல் உள்நோக்கம்; கற்பனை செய்தியை பரப்பும் இ.டி' - அமைச்சர் முத்துசாமி கண்டனம்

"அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அமைச்சர் சு. முத்துசாமி கூறியுள்ளார்.

"அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அமைச்சர் சு. முத்துசாமி கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Minister S Muthusamy on TASMAC money laundering case ED raids Tamil News

"அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அமைச்சர் சு. முத்துசாமி கூறியுள்ளார்.

தமிழக அரசின் டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடப்​ப​தாக​வும், இதில் வரி ஏய்ப்​பு, சட்​ட​விரோத பண பரிவர்த்​தனை நடந்​திருப்​ப​தாக​வும் அமலாக்​கத் துறைக்கு புகார்​கள் சென்​றன. இதன் அடிப்​படை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் நிறுவன தலைமை அலு​வல​கம், அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் உள்ள டாஸ்​மாக் குடோன், அப்​போது அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி​யின் நண்​பர் வீடு, அலு​வல​கங்​கள், திமுக எம்​.பி.ஜெகத்​ரட்​சக​னின் அக்​கார்டு மது​பான உற்​பத்தி நிறு​வனம், எஸ்​என்​ஜே,கால்​ஸ், எம்​ஜிஎம் உள்​ளிட்ட மது​பான உற்​பத்தி நிறு​வனங்​கள், அதன் ஆலைகளில் அமலாக்​கத் துறை கடந்த மார்ச் மாதம் தீவிர சோதனை நடத்​தி​யது.

Advertisment

சென்​னை, கரூர், கோவை, விழுப்​புரம், புதுக்​கோட்டை என 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு மது​பானங்​கள் கொள்​முதல் செய்​தது, பார் உரிமம் வழங்​கியது, மது​பானங்​களை மது​பான கடைகளுக்கு கொண்டு செல்​வதற்​கான போக்​கு​வரத்​துக்கு டெண்​டர் வழங்​கியது உள்​ளிட்​ட​வற்​றில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத்துறை அறிக்கை வெளி​யிட்​டது.

இதையடுத்து, அமலாக்​கத்துறை சோதனை நடத்​தி​யது சட்​ட​விரோதம் என அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மற்றும் டாஸ்​மாக் நிர்​வாகம் சார்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​ததால், உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மேல்​முறை​யீடு செய்​துள்ளது. இந்த சூழலில், சென்னை மணப்​பாக்​கம் சி.ஆர்​.புரத்​தில் உள்ள டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநர் விசாகன் வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று வெள்ளிக்கிழமை சோதனை நடத்​தினர். அப்​போது, ரூ.1,000 கோடி முறை​கேடு தொடர்​பான பல முக்​கிய ஆவணங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றிய​தாக கூறப்​படு​கிறது. அதுதொடர்​பாக விசாக​னிட​மும், அவரது மனை​வி, மகனிட​மும் அதி​காரி​கள் இன்று 2-வது நாளாக விசா​ரணை நடத்​தி வருகிறார்கள். 

இந்த நிலையில்,  அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

Advertisment
Advertisements

"சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது. இந்த சோதனைகளின் போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனைகளின் போதும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத் துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது. பல அமலாக்கத் துறை வழக்குகளில், மாண்பமை உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து மீறி, இவ்வாறு அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enforcement Directorate Tasmac

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: