Advertisment

'2 முறை ஆஜராகாவில்லை': செந்தில் பாலாஜி சகோதரருக்கு 3வது முறை வருமான வரித்துறை சம்மன்

2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு 3வது முறையாக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
TN minister Senthil Balaji brother Asho kumar IT summoned Tamil News

சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அசோக் குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமான வரித்துறை 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் சம்மன் அனுப்பியும் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu V Senthil Balaji Income Tax Income Tax Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment