/indian-express-tamil/media/media_files/JHw2FyxDUyxFaPGVVqDt.jpg)
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது.
v-senthil-balaji | chennai-high-court: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி 2 நாட்களாக தனது கால் மரத்து போனதாக புகார் தெரிவித்துள்ளார். அவரை சிறையில் உள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில், நேற்று காலை அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து வந்தனர். அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்றபின், தற்போது மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளை மறுநாள் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.