/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-07T181820.310.jpg)
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
க.சண்முகவடிவேல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உணவு அருந்திய பின்னர் விமான மூலம் சென்னை பறந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'தி.மு.க அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, 'என்ன பாத்தா பயந்த மாதிரி உங்களுக்கு தெரிகிறதா? எதிர்க்கட்சித் தலைவர் அப்படித்தான் பேசுவார். யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்கும் தெரியும், உலகத்திற்கே தெரியும். பா.ஜ.க-விற்கு அடிமை அ.தி.மு.க தான். தி.மு.க எங்களுடைய தலைவர் கலைஞர் ஸ்டாலின் ஆகியோர் யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது." என்று கூறினார்.
கர்நாடகாவில் தண்ணீர் குறித்து கேட்டு முதல்வர் பெற்று தருவாரா என்ற கேள்விக்கு, 'கண்டிப்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு தேதியும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.' என்றார்.
ஆளுநர் இன்று டெல்லி செல்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, 'அவருக்கு வேறு வேலைகள் இல்லை. அதனால்தான் டெல்லி சென்று சென்று வருகிறார்' என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.