/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-29T140628.387.jpg)
அமைச்சர் செந்தில் பாலாஜி
Tamilnadu Minister V Senthil Balaji Tamil News: 16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு அசாதாரண மாரத்தான் விசாரணையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இடையே கவர்ச்சிகரமான சட்ட புத்திசாலித்தனமான வாதத்தை சென்னை உயர்நீதிமன்றம் கண்டது.
அமலாக்க இயக்குனரகத்தின் (ED) அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குறித்து தீவிர விவாதத்தைத் தூண்டிய தமிழகத்தின் மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜியின் சர்ச்சைக்குரிய கைதுதான் இந்த வாதத்தின் மையமாக இருந்தது.
வேலை மோசடி தொடர்பாக, சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம் மற்றும் அலுவலகத்தில் 18 மணிநேர சோதனைக்குப் பிறகு ஜூன் 14 அன்று அதிகாலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த கைதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்பட்டு, உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் கடுமையான இதயக் கோளாறு இருப்பது தெரியவந்தது. உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
அதனால், அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள ஒரு தனியார் (காவேரி) மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தார். அங்கு அவருக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பிய அமலாக்க துறை அவரை காவலில் வைக்க முயன்றது மற்றும் தனியார் மருத்துவமனையில் அவரது அறுவை சிகிச்சைக்கு எதிராக உறுதியான நகர்வுகளை மேற்கொண்டது.
இதைத் தொடர்ந்து நடந்த நீதிமன்ற விசாரணையில் அமலாக்க துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் எம். முகுல் ரோஹத்கியும், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நீதிபதிகள் ஜே.நிஷா பானு மற்றும் டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் தங்கள் வழக்குகளை தாக்கல் செய்தனர்.
கைது செய்ய முன் அறிவிப்பு இல்லாமல் கைது செய்ய அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியும், கைது செய்யப்பட்ட நபரை காவலில் வைக்கும் உரிமையும் வழக்கின் மையமாக இருந்தது. இதில், அமலாக்க துறையின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய துஷார் மேத்தா, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ், அந்த நபர் தண்டிக்கப்படுவார் என்று நம்பினால், ஒருவரைக் கைது செய்ய அமலாக்க துறைக்கு விரிவான அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் மனுவில், அமைச்சரை கைது செய்தல், ரிமாண்ட் செய்தல் மற்றும் அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை காவலில் வைத்தது போன்ற நடைமுறைகள் மற்றும் சட்டங்களை மீறியதாகக் கூறப்பட்டது. விரைவு அதிரடிப் படையின் உதவியுடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“அங்கு இருந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர் மற்றும் பிரதான வாயில்கள் மூடப்பட்டு விரைவு அதிரடிப் படையினரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஜூன் 13, 2023, காலை 7.45 முதல் ஜூன் 14, அதிகாலை 2 மணி வரை வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதிகாலை 2.30 மணியளவில், அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் அவரது நெஞ்சுவலி காரணமாக அமலாக்கத் துறை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ”என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தனது மனுவில் கூறியிருந்தார்.
கைது நடவடிக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 இன் பிரிவுகள் 41, 41A, 50, மற்றும் 50A, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 19 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 மற்றும் 22(1) ஆகிய பிரிவுகளை மீறப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி புகார் அளித்தார். மேலும், அமைச்சரின் ஆட்சேபனைகளையும் உரிய நடைமுறைகளையும் கருத்தில் கொள்ளாமல், முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.
விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஒத்துழைப்பு தொடர்பான முதன்மை அமர்வு நீதிபதியின் உத்தரவுகளில் முரண்பாடு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். "ஒரு உத்தரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஒத்துழையாமையை உறுதிப்படுத்தி அமலாக்கத் துறைக்கு போலீஸ் காவலை வழங்குகிறது, அதே நேரத்தில் ஜாமீன் மனு தள்ளுபடியானது, அவர் உண்மையில் ஒத்துழைத்ததாக பதிவு செய்கிறது" என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது மெமோவைப் பெற பாலாஜி மறுத்துவிட்டார் என்று கூறிய அமலாக்கத் துறை, அது கைது செய்யப்படுவதைத் தாமதப்படுத்தியது என்றும் குறிப்பிட்டது. மேலும், அமலாக்கத் துறையின் கூற்றுக்கு எதிரான பஞ்சநாமா பதிவுகளுடன் சவால் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இது கைது செய்யப்படுவதை விட மிகவும் முன்னதாகவே முடிவுற்றது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 167 இன் கீழ் காவலில் வைக்க அமலாக்கத் துறை கோரிக்கையையும் அமைச்சரின் மனைவி கேள்வி எழுப்பினார். "பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் பிரிவு 19 இன் படி, கைது செய்யப்பட்ட பிறகு அமலாக்கத் துறை ஒரு நபரை 24 மணிநேரத்திற்கு மேல் காவலில் வைக்க முடியாது," என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா வாதாடுகையில், பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரத்திற்கு இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. அமலாக்கத் துறை ஒரு நபரை கைது செய்ய விரும்பாத போது மட்டுமே, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41வது பிரிவின் கீழ் கைதுக்கு முன் அறிவிப்பு தேவை. அதற்கு நேர்மாறாக, இந்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆரம்பத்தில் இருந்தே கைது செய்ய அமலாக்கத் துறை எண்ணியது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சாத்தியமான ஆதாரங்களை அழிப்பதைத் தடுக்க ஒரு நபர் கைது செய்யப்படலாம்' என்றார்.
கைது நடைமுறையின் போது கைது செய்யப்படாதது தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றி தொடர்ந்து மேத்தா வாதிடுகையில், கைது செய்யப்படுவதற்கான காரணத்தை 'விரைவில்' வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. கைது செய்யப்பட்ட உடனே அவசியமில்லை. இருப்பினும், கைது செய்யப்பட்ட 11 மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனைக்கு சென்ற செஷன்ஸ் நீதிபதி அமைச்சரிடம் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை வாசித்துக் காட்டபட்டினார் என்றும் சுட்டிக்காட்டினார்.
காவலில் வைக்கப்பட்ட விசாரணையை பரிசீலிக்கும் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விலக்குமாறு மேத்தா நீதிமன்றத்தை வேண்டிக்கொண்டார். மேலும் அமர்வு நீதிபதி விதித்த நிபந்தனைகள் பயனுள்ள விசாரணையை சாத்தியமற்றதாக்கியது என்றும் வாதிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சார்பில் ஆஜரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, காவலில் வைத்து விசாரணை செய்யும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விலக்குவதற்கு எந்த சட்ட விதிகளும் அனுமதிக்கவில்லை என்று வாதிட்டார். "நிலநடுக்கம் அல்லது தொற்றுநோய் ஏற்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்த 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க முடியாது" என்றும் அவர் உறுதியாகக் கூறினார். 15 நாள் கால அவகாசம் ஜூன் 28 அன்று முடிவடைந்தது. மேலும் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு எந்த சட்டப்பூர்வ ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ் மனு) செல்லுபடியாகும் என்றும், கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது சட்டவிரோதமான மற்றும் இயந்திரத்தனமான முறையில் நிறைவேற்றப்பட்டது என்றும் ரோஹத்கி வாதிட்டார். காவலில் வைக்க அமலாக்க துறைக்கு உள்ள அதிகாரத்தையும் அவர் கேள்வி எழுப்பினார். அந்த நிறுவனம் வழக்கமான காவல்துறையாக செயல்படவில்லை என்பதை நினைவூட்டினார்.
நாட்டின் இரண்டு உயர்மட்ட வழக்கறிஞர்கள் வாதாடிய இந்த சட்டக் காட்சி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்பூர்வ தன்மையைப் பற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைச் சார்ந்தது. தற்போதைக்கு ஒதுக்கப்பட்ட இறுதி தீர்ப்பு, அமலாக்கத்துறை அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான குறிப்பிடத்தக்க முன்னுதாரணமாக மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜிக்கும் தி.மு.க-விற்கும் முக்கியமானதாக அமையும். ஏனென்றால், செந்தில் பாலாஜி உடல் நலம் தேறிய, ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அவர்களின் வாதங்களுக்கு எதிராக ஏதேனும் இருந்தால் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும். அவர் கைது செய்யப்பட்ட பிறகு மாநில அமைச்சரவையில் ‘இலாகா இல்லாத அமைச்சராக’ தொடர்வதால் ஆளும் கட்சி விரும்பாத ஒன்றாகவும் உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த முதன்மை அமர்வு, இரு தரப்பும் ஜூன் 28 ஆம் தேதிக்குள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.