Advertisment

'கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ் இயக்க முடியாது': ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க முடியாது என்றும், கோயம்பேட்டில் இருந்துதான் பஸ்களை இயக்குவோம் என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Omni Bus Association Anbalagan On running bus from Kilambakkam bus terminus Tamil News

ஆம்னி பஸ்கள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kilambakkam: சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

Advertisment

இருப்பினும், ஆம்னி பஸ்கள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பஸ்கள் இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்துள்ளது.

இதேபோல், இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும், மக்களுடைய தேவை, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் அரசு செயல்பட முடியும். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது என்றும் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பஸ்களை இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்பழகன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க முடியாது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தமிழக அரசு அவகாசம் வழங்க வேண்டும். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

சென்னையில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பை போக்குவரத்துத்துறை மீறுகிறது. முடிச்சூர் பேருந்து நிலையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பஸ்களை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்துதான் இயக்கப்படும். மாநகரப் பகுதியில் உள்ள பயணிகள் எங்கு முன்பதிவு செய்துள்ளார்களோ அந்த பகுதிக்கு நேரில் சென்று பயணம் மேற்கொள்ளலாம்." என்று அவர் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kilambakkam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment