Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தமிழ்நாடு

பொங்கல் பரிசு... குடும்ப அட்டை- வங்கிக் கணக்கு இணைப்பது எப்படி?

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு மூலம் பொங்கல் பரிசாக பணம் வழங்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by WebDesk

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு மூலம் பொங்கல் பரிசாக பணம் வழங்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
02 Dec 2022 15:23 IST

Follow Us

New Update
Tamil Nadu Govt Employees DA Increase

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மக்கள் அனைவரும் புத்தாடை உடுத்து, பொங்கல் வைத்து கோயில் சென்று வழிபடுவர்.

Advertisment

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பில் ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அரிசி, பருப்பு, வெல்லம், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட மளிகை பொருட்களுடன் வேட்டி, சேலையும் வழங்கப்படும். பயனர்களுக்கு அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு சுமார் 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

அந்தவகையில் 2023-ம் ஆண்டு பொங்கல் பரிசு வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இம்முறை பொங்கல் பரிசாக பணம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக குடும்ப அட்டை- வங்கிக் கணக்கு இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அ.தி.மு.க ஆட்சியில் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள் இல்லை. குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு வங்கி கணக்குகள் இருந்தும், ஆதார் இணைக்கப்படாததால் வங்கி கணக்கு இல்லை என தரவுகள் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, இது குறித்த விவரங்களை அந்தந்த பகுதி ரேஷன் பணியாளர்கள் பெற்று இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

14,86,000 குடும்ப அட்டைதார்களின் விவரங்கள் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவைகள் குறித்து சம்பந்தப்பட்ட மண்டல இணைப்பதிவாளர்களுக்கு ஏற்கனவே அனுப்பபட்டுள்ளது. இதில்,

ஏற்கனவே வங்கி கணக்கு உள்ளவர்களுக்கான நடைமுறை

அந்ததந்த பகுதி ரேஷன் கடைப் பணியாளர்கள், பயனர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஏற்கனவே பயனர்கள் வங்கி கணக்கு இருந்தால், அந்த வங்கி கணக்கு பாஸ் புக்கின் முதல் பக்க நகல் மற்றும் அதில் குடும்ப அட்டை எண், குடும்பத் தலைவர் எண் குறிப்பிட்டு வாங்க வேண்டும். அதனை பெற்று பணியாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

வங்கி கணக்கு இல்லாதவர்கள் செய்ய வேண்டிவை

வங்கி கணக்கு இல்லாதவர்கள் முதலில் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்க வேண்டும். பின் அதன் விவரங்களை ரேஷன் பணியாளரிடம் கொடுத்து இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!