சிறிய வேளாண் இயந்திரங்கள்: மானியம் நீங்கலாக செலுத்தினால் போதும்: அரசு அதிரடி

சிறிய வேளாண் இயந்திரங்களைப் பெற மானியம் நீங்கலாக மீதித் தொகை செலுத்தினால் போதும் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிறிய வேளாண் இயந்திரங்களைப் பெற மானியம் நீங்கலாக மீதித் தொகை செலுத்தினால் போதும் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
rop Insurance Awareness Vehicle

சிறிய வேளாண் இயந்திரங்களுக்கு மானியத் தொகை செலுத்த வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு வேளாண் உற்பத்தியையும் விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தைப் செயல்படுத்தி வருகிறது.

Advertisment

இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாள்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு குறித்த காலத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மொத்தத் தொகையினை வங்கிகளில் கடனாக பெறுவதில், வங்கிகளில் உள்ள சிக்கலான நடைமுறைகளினால் காலதாமதம் ஏற்படுகிறது. வங்கிக்கடன் பெற்ற பின், மானியத்துக்கும் சேர்த்து விவசாயிகள் வட்டித் தொகையினை செலுத்த வேண்டி இருந்தது.

எனவே தற்போதுள்ள நடைமுறை மாற்றப்பட்டு விவசாயிகள் தங்களின் பங்களிப்புத் தொகையை மட்டும், அதாவது இயந்திரங்களுக்கான மொத்த தொகையிலிருந்து மானியத் தொகையை கழித்து மீதமுள்ள தொகை நேரடியாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அல்லது விநியோகஸ்தர்களுக்கு அல்லது முகவர்களுக்கு செலுத்தினால் போதும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: