Advertisment

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு: பள்ளிக்கல்வித் துறை கடும் எச்சரிக்கை

கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
School Education Department appoints special officers, special officers district wise to supervise education schemes, கல்வித் துறை திட்டங்களை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரி, பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு, Tamil Nadu School Education Department, special officers in district wise to supervise education schemes

கடுமையான வெப்பம் நிலவும் இந்தக் காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Nadu School Education Department: தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடுமையான வெப்பம் நிலவும் இந்தக் காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும், கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.

மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment