/indian-express-tamil/media/media_files/fRTTGHClNqn3AIy3w7I9.jpg)
தமிழகம் முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பிளஸ் 1, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து ஏப்ரல் மாதத்திலேயே கோடை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், முன் கூட்டியே 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.
இதேபோல், ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜுன் 1 ஆம் தேதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. அத்துடன், தமிழக மக்களை வாட்டி வதைத்த வெப்ப அலை உள்ளிட்ட காரணங்களாலும் மீண்டும் பள்ளி திறப்பு தள்ளிப்போனது. இதனால், இந்த ஆண்டு ஜுன் 10 ஆம் தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 10 நாள்கள் பள்ளி திறப்பு தள்ளிப் போன சூழலில், விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவித்தது. அதாவது, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 210 நாட்கள் பள்ளிகள் இயங்கும். ஆனால் இந்த முறை கூடுதலாக 10 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை 2வது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் 2வது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், விடுமுறை விடப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.