நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, ஆளுநரின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதைப்பற்றி அவர் கூறியுள்ளதாவது, "ஆளுநர் ஆர்.என்.ரவி உணர்ச்சிவசப்பட்டு செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்து விட்டார், தற்போது அதை அவர் உணர்ந்துவிட்டார்", என்றார்.
மேலும், "அமைச்சரவையில் தலையிடும் அதிகாரம் இல்லை என்பதை ஆளுநர் உணர்ந்து கொண்டுள்ளார். ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு, நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களாகவே பதவியில் இருந்து நீங்கிவிடுவார்கள்", என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil