/tamil-ie/media/media_files/uploads/2023/06/Express-Image-4-1.jpg)
டிஜிபி ஷகில் அக்தர்
தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜி எம். ஷகீல் அக்தர், மாநில தகவல் ஆணையர்களாக முன்னாள் ஏடிஜிபி பி.தாமரை கண்ணன், ஆர்.பிரியா குமார், டாக்டர் கே திருமலைமுத்து, டாக்டர் எம் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் பதவிகளுக்குத் தகுதியான நபரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் ஆணையர் பதவிகளும் நிரப்பப்பட்டுள்ளன. முன்னாள் ஏடிஜிபிக்களான தாமரைக்கண்ணன், பிரியாகுமார், திருமலை முத்து, செல்வராஜ் ஆகியோர் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.