/indian-express-tamil/media/media_files/7VdpaG54sVaRYWPyuvW5.jpg)
கோடை விடுமுறையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்தனர். குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, வால்பாறை, கன்னியாகுமரி, கேரளா போன்ற இடங்களில் குவிந்தனர். கார், பஸ், வேன்களில் மக்கள் பயணம் செய்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், சுற்றுலா பேருந்துகளில் அவ்வப்போது முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அதாவது, பயணிகள் பேருந்து போல கட்டணம் வசூலித்து பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்கி விதிமீறலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை கூறுகையில், அகில இந்திய சுற்றுலா வாகன அனுமதிச் சீட்டை பெற்று, பயணிகள் பேருந்து போல கட்டணம் வசூலித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்கி விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பற்றிய விவரங்களை 1 வருடத்துக்கு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் எனவும் கேட்கப்படும் நேரத்தில் பயணிகள் விவரங்களை காண்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.