/tamil-ie/media/media_files/uploads/2023/06/toll-759.jpg)
சி.ஏ.ஜி அறிக்கையில் அதிர்ச்சி
ஓமலூர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடிகளில் ஜூன் மாதம் 2010ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ. 133.36 கோடி வருவாய் இழப்பு இந்திய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஏற்பத்தி இருப்பதை சி.ஏ.ஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக கிருஷ்ணகிரி- தோப்பூர் வரை 62 கி.மீ சாலை, கிருஷ்ணகிரி முதல் தும்பிபாடி வரையிலான 86 மீட்டர் சாலைக்கு பாளையம் சுங்கச்சாவடிக்கு ஆண்டுக்குசராசரியாக ரூ. 715.86 கோடி கட்டணம் வாகன ஓடிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இதேபோல் தும்பிபாடியிலிருந்து நாமக்கல் வரை செல்லும் வாகனங்களிடமிருந்துஓமலூர் சுங்கச்சாவடிகட்டணம் வசூலிக்கிறது.
இந்த நிலையில் ஓமலூர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடியில் ஜூன் மாதம் 2010ம் ஆண்டு முதல் 2021ம்ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ. 133.36 கோடி வருவாய் இழப்புஇந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு ஏற்படுத்திஇருப்பது சி.ஏ.ஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதில் பாளையம் சுங்கச்சாவடிரூ. 73.88 கோடியும், ஓமலூர் சுங்கச்சாவடியில்54.48 கோடியும் இழப்பைஏற்படுத்தி உள்ளது. இந்த சாலைகள் அமைக்க முன்னணி நிறுவனங்களுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் வருவாய்ப் பகிர்வு ஒப்பந்தத்தில் தும்பிப்பாடி- சேலம் பகுதி மட்டும் சேர்க்கப்பட்டு, சேலம் புறவழிச்சாலை அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அதுபோல தொப்பூர்- தொப்பூர் கேட் வரை 7.4 கிலோமிட்டருக்குவிதி சேர்க்கப்படவில்லை.இப்படி பல்வேறு வகைகளில் இழப்பு ஏற்பட்டுள்ளதை சி.ஏ.ஜி கண்டுபிடித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.