தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம்(பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.
இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
21 மாநகராட்சிகளின் பட்டியலையும் அதன் தேர்தல் முடிவுகளையும் இங்கே பார்க்கலாம். இங்கே உள்ளே விவரம் 22.2.2022 மாலை 4 மணி நிலவரப்படி ஆகும்.
- சென்னை மாநகராட்சி (200 வார்டுகள்)
சென்னையில் திமுக 91 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 8 வார்டிலும், அதிமுக 9 வார்டிலும் வென்றது.
- மதுரை மாநகராட்சி (100 வார்டுகள்)
51 வார்டுகளில் திமுக வென்றி பெற்றுள்ளது. அதிமுக 12 வார்டுகளிலும் காங்கிரஸ் 5 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
- கோவை மாநகராட்சி (100 வார்டுகள்)
திமுக-35, அதிமுக-3, காங்கிரஸ்-5, பாஜக-0, சிபிஐ-1. சிபிஐ (எம்)-3
- திருச்சி மாநகராட்சி (65 வார்டுகள்)
திமுக-42, அதிமுக-3, காங்கிரஸ்-5, பாஜக-0, சிபிஐ-1. சிபிஐ (எம்)-3
- சேலம் மாநகராட்சி (60 வார்டுகள்)
திமுக-29, அதிமுக-4
- திருநெல்வேலி மாநகராட்சி (55 வார்டுகள்)
திமுக-32, அதிமுக-3, காங்கிரஸ்-1.
- திருப்பூர் மாநகராட்சி (60 வார்டுகள்)
திமுக-15, அதிமுக-13, காங்கிரஸ்-1, பாஜக-0, சிபிஐ-2.
- வேலூர் மாநகராட்சி (60 வார்டுகள்)
திமுக-15, அதிமுக-4.
- ஈரோடு மாநகராட்சி (60 வார்டுகள்)
திமுக-35, அதிமுக-4, காங்கிரஸ்-3.
- தூத்துக்குடி மாநகராட்சி (60 வார்டுகள்)
- தஞ்சாவூர் மாநகராட்சி (51 வார்டுகள்)
திமுக-73, அதிமுக-10, காங்கிரஸ்-4, பாஜக-1, சிபிஐ(எம்)-2.
- திண்டுக்கல் மாநகராட்சி (48 வார்டுகள்)
திமுக-30, அதிமுக-5, காங்கிரஸ்-2, பாஜக-1, சிபிஐ(எம்)-3.
- ஒசூர் மாநகராட்சி (45 வார்டுகள்)
- நாகர்கோவில் மாநகராட்சி (52 வார்டுகள்)
நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 52 வார்டுகளில் 29இல் திமுகவும் அதிமுக 7 வார்டுகளிலும் வென்றது. பாஜக 7 வார்டுகளை கைப்பற்றியது.
- ஆவடி மாநகராட்சி (48 வார்டுகள்)
- காஞ்சிபுரம் மாநகராட்சி (51 வார்டுகள்)
திமுக-6, அதிமுக-2.
- கரூர் மாநகராட்சி (48 வார்டுகள்)
திமுக-42, அதிமுக-2, காங்கிரஸ்-1, சிபிஐ(எம்)-1.
திமுக நிர்வாகியை தாக்கியதாக வழக்கு: ஜெயக்குமார் கைது; சிறையில் அடைப்பு
- கடலூர் மாநகராட்சி (45 மாநகராட்சி)
திமுக-30, அதிமுக-6, காங்கிரஸ்-1, பாஜக-1.
- சிவகாசி மாநகராட்சி (48 வார்டுகள்)
- தாம்பரம் மாநகராட்சி (70 வார்டுகள்)
- கும்பகோணம் மாநகராட்சி (48 வார்டுகள்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil