/indian-express-tamil/media/media_files/oGvEIw4AoEn77WTGkaay.jpg)
மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும் என்றும் மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி கடந்த 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 543 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. நாளை முதல் நாளை மறுநாள் வரை வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும், துணை மின் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும் என்றும் மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.