/tamil-ie/media/media_files/uploads/2022/12/madras-HC-3.jpg)
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு (டி.என்.எம்.சி.) ஆன்லைன்/இ-வாக்களிப்பு மூலம் தேர்தலை நடத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சையத் தாஹிர் ஹுசைனின் இரண்டு ரிட் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன் ஆன்லைனில் தேர்தலை வைக்க ஆலோசனை வழங்கினார்.
டிசம்பர் மாதம் தொடக்கத்தில், கவுன்சிலுக்கான தேர்தலை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
தமிழ்நாடு மருத்துவப் பதிவுச் சட்டம் மற்றும் இதர பிரச்சனைகள் எல்லாம் மூன்று மாதங்களில் முழுமையாகத் திருத்தப்படும் என்று அட்வகேட் ஜெனரல் ஆர்.ஷாமுகசுந்தரம் சமர்ப்பித்ததன் அடிப்படையில் டிசம்பர் 6ஆம் தேதி இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் இந்த சமர்ப்பிப்பை பதிவு செய்த நீதிபதி, 1914 சட்டத்தை மூன்று மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்யுமாறும், அதன்பிறகு தேர்தலை நடத்துமாறும் அரசுக்கு உத்தரவிட்டார்.
அக்டோபர் மாதம் தேதியிட்டு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை சுயேச்சையான நிர்வாகியாக நியமிக்கவும் கோரியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.