/tamil-ie/media/media_files/uploads/2023/08/TNPSC-Group-4.jpg)
சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியலை ரத்து செய்ய டி.என்.பி.எஸ்.சி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tnpsc | Chennai High Court | டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற்ற தேர்வர்களை பொதுப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி இடஒதுக்கீடு பட்டியலின் கீழ் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது, “இடஒதுக்கீடு முறை சிவில் நீதிபதிகள் தேர்வில் தவறாக பின்பற்றப்பட்டுள்ளது என வாதிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 254 சிவில் நீதிபதிகளுக்கான புரவிஷனல் பட்டியலை ரத்து செய்தனர்.
இந்த வழக்கில் நீதிபதிகள் சுப்பிரமணியன், ராஜசேகரன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.