TNPSC Group 4 : குருப் 4 தேர்வில் வெற்றி பெற்றவரா நீங்கள்.. உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தேதிகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

தேதிகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை ஐகோர்ட்

சென்னை ஐகோர்ட்

TNPSC Group 4 :

Advertisment

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் , சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிபு வெளியாகியுள்ளது.

சுமார் 17 லட்சம் பேர் தேர்வு எழுதிய குரூப் 4 தேர்வின், தேர்வு முடிவுகள் கடந்த 30 ஆம் தேதி வெளியாகின.  தேர்வு எழுதியவர்களில் 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 30 ஆயிரம் முதல் கலந்தாய்வுக்கு அழைப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் சான்றிதழ் பதிவேற்றங்கள் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை இ-சேவை மையங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  இந்த தேதிகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Advertisment
Advertisements

இதுக்குறித்து செய்தியாளர்களை சந்தித்த  டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் பேசியதாவது, “ குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள், நாளை முதல் வரும், 30ம் தேதி வரை, சான்றிதழை பதிவு செய்ய, ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், கூடுதல் காலியிடங்கள் காரணமாக, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கண்டறிய, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.எனவே, சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டியோர் பட்டியல், வரும், 27ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வர்கள், வரும், 30 முதல், செப்., 18 வரை, தமிழக அரசின் இ- --- சேவை மையங்களில் மட்டுமே, 'ஸ்கேன்' செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட இ- - சேவை மையங்களின் முகவரி, அரசு பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Tnpsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: