Advertisment

அலைமோதும் பயணிகள் கூட்டம்- கிளாம்பாக்கத்திலிருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு 450 அரசு பஸ்கள் இயக்கம்

பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

author-image
WebDesk
New Update
kilambakkam bus terminus chennai people protest for less buses to Trichy Tamil News

Tamil Nadu

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர் பகுதிகளுக்கு 450 அரசு பஸ்கள் இயக்கப்படும் என,  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் அறிவித்துள்ளது

Advertisment

இது குறித்து விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;

வார இறுதி நாட்களான 26.04.2024 (வெள்ளிக்கிழமை) மற்றும் 27.04.2024 (சனிக்கிழமை)  மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை, மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 200, சனிக்கிழமை 250,  மொத்தம் 450  சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tnstc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment