/indian-express-tamil/media/media_files/2025/10/28/bus-sabarimala-2-2025-10-28-20-08-52.jpg)
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. Photograph: (Image Source: TNSTC)
தமிழ்நாட்டில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தமிழ் மாதம் கார்த்திகை 1-ம் தேதி் முதல் அதாவது நவம்பர் 17-ம் தேதி முதல் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிச் செல்வார்கள். சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் செல்கிறார்கள்.
சபரிமலை செல்லும் ஐயப்பன் சுவாமி பக்தர்களின் அவர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக, பம்பைக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 16-ம் தேதி இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. டிசம்பர் 27 முதல் 30 வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுவதால் அன்றைய தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதற்காக அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (அல்ட்ரா டீலக்ஸ்) குளிர்சாதன பேருந்து (ஏசி) குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி (என்.எஸ்.எஸ்) வசதிகள் கொண்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சிறப்பு பேருந்துகளுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக www.tnstc.in மற்றும் TNSTC Offical Opp ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us