/indian-express-tamil/media/media_files/3RAede15HzRIvUaPfy4Y.jpg)
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கோவையில் 427 பேர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று(நவ.7) காலை கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற்தகுதி தேர்வில் 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதனை மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்த உடற்தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது என்பது குறிப்படத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.