தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கோவையில் 427 பேர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
/indian-express-tamil/media/media_files/11Kon3Pk847dKOjWnlCh.jpeg)
இன்று(நவ.7) காலை கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற்தகுதி தேர்வில் 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/MGQiCIFWOWUgWa9OUaQR.jpeg)
இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதனை மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்த உடற்தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது என்பது குறிப்படத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“