/tamil-ie/media/media_files/uploads/2022/09/powercut-1-9.jpg)
Chennai Power Shutdown - 26th September
சென்னையில் இன்று (செப்.26) சில இடங்களில் மின் பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்.26ஆம் தேதி திங்கள்கிழமை திருவேற்காடு மற்றும் அதன் பகுதிகளான ஐஸ்வர்யா கார்டன், ஜெயலட்சுமி நகர், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி, கோ-ஆப்ரேட்டிவ் நகர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல், பெரம்பூர் பகுதியில் உள்ள பேப்பர் மில்ஸ் ரோடு சபாபதி தெரு, மதுரைசாமி மடம் மெயின் தெரு, வாசுதேவன் தெரு, எல்லை அம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.