/tamil-ie/media/media_files/uploads/2018/12/madhya-pradesh-1.jpg)
Tamil Nadu news today in tamil,
சென்னையில் இன்று இரவும், நாளையும் விட்டு விட்டு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மழை:
சென்னையில் நேற்று இரவு முதல் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என கூறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும். இதனால் தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.