தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி,
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி,
தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பதிவானது. இதனால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். நகரமே வெள்ளக் காடாக மாறியது. பலர் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வெள்ள சேதம் குறித்த விவரங்களும் கணக்கெடுக்கப்பட்டது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று (டிச.26) தொடங்கியுள்ளது. சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட வட்டங்களில் பொதுமக்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. ரேஷன் கடை பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“