Advertisment

சென்னை புறநகரில் 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - வாகன ஓட்டிகள் கவலை

சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
paranur toll

சென்னை புறநகரில் 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

Advertisment

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது. 

இந்நிலையில், சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அறிவிப்பின்படி, பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக் கணக்கான வாகனங்கள் செல்லும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சவாடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Toll Gate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment