ரூ.5 முதல் ரூ.150 வரை… தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sasa

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று (செப்.1) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisment

சுங்கச் சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என இருமுறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. 

இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு, இங்கு 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று மேலும் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக் கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: